Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னாரில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

Published

on

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த   தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (4) காலை இடம்பெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் ஜெயதிலக மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டதோடு பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டு இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.