Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை: வடமாகாண ஆளுனர்

Published

on

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய அரசாங்கம், மாகாணசபை, ஆளுனர் அலுவலகம் என்பன இணைந்து நிதி சம்மந்தமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இருக்கும் நிதிகளை சரியான முறையில் செலவு செய்ய திட்டமிட்டு வருகின்றோம்.

அரச உத்தியோகர்தர்கள் மக்களுக்கு சரியான முறையில் வேலை செய்ய வேண்டும்.

ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *