Connect with us

உள்நாட்டு செய்தி

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் மூன்றாவது டோஸ்

Published

on

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்ட 3 மாதங்கள் கடந்தவர்கள் இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.