Connect with us

உள்நாட்டு செய்தி

தீபாவளி  கொண்டாட்டங்கள்

Published

on

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும் இன்றைய தினம் (4) மன்னார் மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பாக பொருட்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் மக்கள் பொருட்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *