Connect with us

உலகம்

உலகில் 6 கோடியே 7 இலட்சத்து 398 பேருக்கு வைரஸ் தொற்று

Published

on

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது. 

குறிப்பாக இந்திய அரசு வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 481 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 280 பேரும், மெக்சிகோவில் 813 பேரும், இத்தாலியில் 722 பேரும் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 7 இலட்சத்து 398 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 73 இலட்சத்து 28 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1 இலட்சத்து 3 ஆயிரத்து 887 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 19 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 25 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா – 2,68,198

பிரேசில் – 1,70,799

இந்தியா – 1,34,699

மெக்சிகோ – 1,02,739

இங்கிலாந்து – 56,533

இத்தாலி – 52,028

ஸ்பெயின் – 44,037

ஈரான் – 46,207