Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்

Published

on

மாணவர்களும், ஆசிரியர்களும் நாளை (21) பாடசாலைகளுக்கு சமூகமளிப்பார்கள் என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர் நிதியமைச்சர் ஆகியோர் தலையிட்டு நல்ல தீர்வை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை (21) முதல் பல கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதுடன் 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.