Connect with us

உலகம்

கேரளாவில் அடை மழை : 10 பேர் பலி, பலரை காணவில்லை

Published

on

கேரளாவில் தொடரும் அடை மழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.

மழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மணி சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு மற்றும் மத்திய கேரள பகுதிகள் கடுமையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கு தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் முழ்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்பு மண் சரிவு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரும் மீட்பு படையினரும் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.