Connect with us

உள்நாட்டு செய்தி

Pandora Papers : திருக்குமரன் நடேசன் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

Published

on

தனக்கும், தனது மனைவிக்கும் எதிராக Pandora Papers இல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமரன் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

தனக்கும், தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.