Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வந்த இராட்சதன்

Published

on

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Ace முதற்தடவையாக இன்று (06) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச முனையத்திற்கு குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக துறைமுகங்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

24 ஊழியர்களுடன் குறித்த கப்பல் இன்று நள்ளிரவு வரை நங்கூரமிடப்பட்டிருக்கும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Evergreen நிறுவனத்திற்கு சொந்தமான 400 மீட்டர் நீளமான குறித்த கப்பலில் 24,000 பாரிய கொள்கலன்கள் உள்ளன.

61.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பல், 22.6 கடல் மைல் வேகத்தில் நகரக்கூடியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *