Connect with us

உள்நாட்டு செய்தி

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

Published

on

நாட்டிற்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு செவ்வாயக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கின்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றுமுழுதாக நீக்க வேண்டும் என்பதனை தாம் வலியுறுத்துவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான M.A. சுமந்திரன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் அரசியல் கைதிகளை இன்று (25) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,