Connect with us

உள்நாட்டு செய்தி

கப்ராலுக்கு ஜனாதிபதி நியமனக் கடிதம்

Published

on

இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு ஜனாதிபதியால் நியமன கடிதம் வழங்கப்பட்டது.

இதேவேளை, அஜித் நிவாட் கப்ரால் இன்று (15) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொட பெயரிடப்பட்டுள்ளார்.