Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 43 ஆயிரத்து 497 ஆக அதிகரிப்பு

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 இ லட்சத்து 51 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 12 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 284 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 43 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.