Connect with us

உள்நாட்டு செய்தி

தனிமைப்படுத்தல் ஊடரங்கை நீடிக்குமாறு கோரிக்கை

Published

on

தனிமைப்படுத்தல் ஊடரங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கேனும் நீடிக்க வேண்டும் என கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பொது மக்கள் சுய கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

ராகம வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் சிலவற்றை கையளிக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.