Connect with us

உள்நாட்டு செய்தி

‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானம்

Published

on

கொவிட் வைரசு பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நாளை காலை இடம்பெறவுள்ளது.

இதன்போது இதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.

‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்’ கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இது இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 4மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *