Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா தொற்றினால் நேற்று 156 பேர் பலி

Published

on

கொரோனா தொற்றினால் மேலும் 156 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவே ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடதக்கது.-

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 620 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.