உள்நாட்டு செய்தி
செப்டேம்பரில் பாடசாலைகள் ஆரம்பிக்குமா? கல்வியமைச்சரின் பதில்
தற்போதைய நிலைமையில் எதிர்வரும் செப்டேம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.