Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் தொடரும் அகழ்வு பணி

Published

on

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அப்பகுதியில் பாதுகாப்பு அணைக்கட்டு காணப்படும் நிலையில் அந்த அணைக்கட்டை அகற்றிய போதே குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நீதவான் முன்னிலையில் ஆரம்பமான குறித்த பணி சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டனுசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன், அடையாளம் காணப்பட்ட எச்சங்கள் பொதியிடப்பட்டது.

இதன் பணிகள் இன்றும் (07) முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *