Connect with us

உள்நாட்டு செய்தி

ரிஷாட் வீட்டில் மற்றுமொரு பணிப்பெண் துஸ்பிரயோகம்: விசாரணைகளில் வெளியாகும் தகவல்

Published

on

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூவர் அடங்கிய விசேட குழு முன்னெடுத்த சடலம் மீதான இரண்டாவது உடற்கூற்று பரிசோதனையின் அறிக்கை கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

இந்த நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றும் இருவரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், 2009 ஆண்டு முதல் இதுவரை 11 பேர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியுள்ளதாகவும் அவர்களில் ஹிஷாலினி என்ற சிறுமியுடன் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இவர்களில் 8 பேரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.