Connect with us

உள்நாட்டு செய்தி

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்

Published

on

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

154ம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என்ற குடும்பத்தர் என பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலிற்கு அமைவாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.