Connect with us

உள்நாட்டு செய்தி

கத்தோலிக்க சிற்றாலய சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்படும்

Published

on

மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் தளங்களை முகாமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவரான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அம்பாறையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீகவாபி ரஜ மகா விகாரையின் மீள்கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பொருட்டு நேற்றைய தினம் (15) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளரிடம் வருகை தந்திருந்த ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.