Connect with us

உள்நாட்டு செய்தி

6 லட்சம் பெறுமதியான வீட்டை கட்ட முடியாத குடும்பங்களிற்கு படையினரின் உதவியை வழங்க வேண்டுகிறேன் – கரைச்சி பிரதேச செயலாளர்

Published

on

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கிடைத்துள்ள  6 லட்சம் பெறுமதியான வீட்டை கட்ட முடியாத குடும்பங்களிற்கு படையினரின் உதவியை வழங்க வேண்டுகிறேன் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் இராணுவத்தினரால் 11 லட்சம் பெறுமதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,இராணுவத்தினர் இவ்வாறான சமூக பணிகளை மேற்கொள்வது தொடர்பில் பாராட்டுகிறேன். எமது பிரதேசத்தில் இவ்வாறான வீடுகளை அமைத்து சமூகத்திற்கு செய்யும் பணிகளிற்காக பிரதேச செயலகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியின் பணிப்பின் பேரில் சட்டவிரோத மண்ணகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவரது பணிப்பின்பேரில் படையினர் காவல் கடமயில் ஈடுபட்டு கட்டுப்படுத்தி உள்ளனர். அதற்கு இந்த நிகழ்வில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலையில் கிளிநொச்சி இராணுவ தலமைக் கட்டளை அதிகாரியிடம் மற்றுமொரு கோரிக்கையை இந்த நிகழ்வில் விடுக்கின்றேன். எமது மக்களிற்கு தற்போது பத்து லட்சம் மற்றும் 6 லட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்கள் கிடைத்துள்ளது. அதில் 6 லட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டம் கிடைத்தவர்கள் 2 அங்கத்தவர்களிற்கு உட்பட்டவர்களாவர்.

அவர்களில் சில குடும்பங்கள் குறித்த தொகைக்குள் கட்டி முடிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். அவ்வாறான குடும்பங்களிற்கு படையினரின் உதவியுடன் வீடுகளை அமைத்து கொடுக்க நான் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றேன். 

இன்றைய தினம் இந்த வீட்டினை கட்டி முடித்து பயனாளிக்கு கையளித்தமைக்கு கரைச்சி பிரதேச செயலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற தேனீர் விருந்தில் பிரதேச செயலாளரின் கோரிக்கையை ஏற்பதாகவும், 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அவ்வாறான குடும்பங்களை அடையாளம் காட்டுமாறும் கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க பிரதேச செயலாளரிடம் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி.ரணசிங்க, 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கண்டாவளை பிரதேச செயலாளர் T.பிருந்தாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *