Connect with us

உள்நாட்டு செய்தி

உயர் நீதிமன்றத்திற்கு சென்ற ஐ.ம.ச

Published

on

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

​கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வௌியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கையின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுதவாக தீர்ப்பளிக்குமாறு அவர்கள் குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.