Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியாவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட்

Published

on

நுவரெலியா நகரில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும் மற்றும் குறித்த காப்பகத்தின் ஊழியர்கள் 8 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகள் காப்பகத்தில் ஏற்கனவே 8 சிறுவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், காப்பகத்தில் இருந்த ஏனைய குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொற்றாளர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகள் காப்பகத்தை கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.