Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 54 கொவிட் மரணங்கள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.

உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 2,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.