Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 47 கொவிட் மரணங்கள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,943 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 166,045 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

நேற்று உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும், 21 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.