Connect with us

உலகம்

கொரோனா சங்கிலியை உடைக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – ஸ்டாலின்

Published

on

தமிழகத்தில் தொடர்ந்தும் முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.

“தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலை தடுத்திட முடியும்.

முழு ஊரடங்கை தொடர்ந்தும் நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.