Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த விசேட திட்டம் ஒன்று தேவை : ரணில்

Published

on

கொவிட் நிலமையை கட்டுப்படுத்த புதிதான ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொவிட் நிலமை தொடர்பில் நாட்டு மக்களுக்கு நேற்று (23) விசேட உரை ஒன்றை ஆற்றி அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த இலங்கைக்கும் 3 கோடி தடுப்பூசி தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்த வைத்திய ஆலோசனைகளுக்கு அமைய விசேட திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டியது முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேடமாக பொருளாதாரத்தை காரணம் காட்டி உயிர்களை பழிக்கொடுக்க வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.