Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 100 நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை அண்மிக்கும்

Published

on

நேற்றைய நாளில் 36 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 51 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 ஆயிரத்து 623 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 343 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் 100 நாட்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை அண்மிக்கும் என, சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.