Connect with us

உள்நாட்டு செய்தி

24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2456 கொரோனா

Published

on

இன்று (18) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 2456 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இவர்களில் 23 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 320 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 677 பேரும் பதுளை மாவட்டத்தில் 50 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 23 நபர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 255 பேரும் மன்னார் மாவட்டத்தில் ஐவரும் நுவரெலியா மாவட்டத்தில் 25 பேரும் கண்டி மாவட்டத்தில் 34 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 51 நபர்களும் யாழ். மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 பேரும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.