Connect with us

உள்நாட்டு செய்தி

ரயில்வே திணைக்களம் எடுத்துள்ள முடிவு

Published

on

நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

சுமார் 51 ரயில்கள் நாளை இயக்கப்பட உள்ளதாகவும் மாலையிலும் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக நாளை (17) தொடக்கம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.