Connect with us

உள்நாட்டு செய்தி

கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

Published

on

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மண்திட்ட ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (14) திகதி அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீடும் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *