Connect with us

உள்நாட்டு செய்தி

நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தும் இரத்து

Published

on

இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை இன்று (11) நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக பேருந்துகளை பயன்படுத்தும் விதம் பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.