Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று வரை ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 286 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

Published

on

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயத் தடுப்புப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கமைவாக, கடந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கொவிட் சீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 342 பேருக்கு ஏற்றப்பட்டிருக்கின்றது.

நேற்று வரை அதன் இரண்டாவது டோஸ் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 286 பேருக்கு ஏற்றப்பட்டிருப்பதாக அந்தப் பிரிவு அறிவிருக்கின்றது.

அத்துடன் 2 ஆயிரத்து 865 பேருக்கு சினபோம் தடுப்பூசியின் முதலாவது டோசும் 2 ஆயிரத்து 432 பேருக்கு அதன் இரண்டாவது டோசும் ஏற்றப்பட்டிருக்கின்றது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தங்கியிருக்கும் சீனப் பிரஜைகளுக்கு சினபோம் தடுப்பூசி ஏற்றப்படுகின்றன.