Connect with us

உள்நாட்டு செய்தி

இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பஸ் மாவுடுகலை பகுதியில் விபத்து

Published

on

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில் பயணித்த பயணிகள் காயமுற்ற நிலையில் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஐவர் அவசர சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை இராகலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.