Connect with us

உள்நாட்டு செய்தி

பொகவந்தலாவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட்

Published

on


பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி க.ஜெகணேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான குறித்த குடும்பத்தின் தந்தையுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது