Connect with us

உள்நாட்டு செய்தி

ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை

Published

on

ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே நடத்துனர் சங்க பிரதம செயலாளர் அனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பொது முகாமையாளர் வெளியில் இருந்து நியமிக்கப்படல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தே இந்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.