Connect with us

உள்நாட்டு செய்தி

அக்கரபத்தனை வோல்புறுக் பகுதியில் தளம் வெட்டிய ஒருவர் பலி

Published

on

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வோல்புறுக் பகுதியில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மண்ணில் புதையுண்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

பெல்மோரா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் ரவிகுமார் (வயது 43)  இவ்வாறு மரணமானர்

மேற்படி மூவரும் கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக தளம் வெட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் பிற்பகல் 2.15 மணியளவில், மண் மேடொன்று சரிந்து விழுந்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து மூவரையும் மீட்டுள்ளனர். எனினும் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலை யின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.