Connect with us

உள்நாட்டு செய்தி

பொகவந்தலாவையில் இன்று 9 பேருக்கு கொவிட்

Published

on

பொகவந்தலாவ தொண்டமான்புறம் வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு இன்று (01) கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி கதிர்வேல் ஜெகனேஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

8 தொற்றாளர்களுடன் சேர்த்து பொகவந்தலாவ கிலானி தோட்டத்தைச் சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதியானதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி மேலும் கூறியுள்ளார்.