Connect with us

உள்நாட்டு செய்தி

திங்கள் முதல் மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்.

Published

on


எதிர்வரும் திங்கள் முதல் மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் வகுப்புக்களில் மாணவர்களை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வகுப்பொன்றில் ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையாக 15 காணப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


30 மாணவர்கள் எனில் இருபிரிவுகளாகவும் 45 எனில் மூன்று பிரிவுகளாகவும் பிரித்து வகுப்பை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் போட்டிகள் மற்றும் பரீட்சைகளை தவிர்ப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *