Connect with us

உள்நாட்டு செய்தி

பசறை பஸ் விபத்து சாரதிக்கு விளக்கமறியல்

Published

on


கைது செய்யப்பட்ட பசறை பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல் உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை பாரவூர்தியின் சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று பதுளை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பசறை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக தலா 30,000 ரூபாவை வழங்குவதற்கு ஊவா மாகாண சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் மாகாண சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பத்திரண தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *