Connect with us

உள்நாட்டு செய்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 1 மாதத்திற்குள் தீர்வு – டக்ளஸ்

Published

on


காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்துள்ளார்.


காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்தார்.

இதன்போது அமைச்சர் பயணித்த வாகனத்தை மறித்து சிலர் கவனயீர்ப்பில் ஈடுபட்டாலும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைக் கொண்ட 12 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது.


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *