Connect with us

உள்நாட்டு செய்தி

விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

Published

on

பசறை, 13ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேரின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு…

ராமன் நாகரத்தினம் மீதும்பிட்டிய, ஜயதுன் பேபி 24 ஆம் கட்டை லுணுகல, சுப்ரமணியம் ராஜேந்திரன் சோலன்ஸ், ஆர்.எச்.எம்.சந்தமாலி யப்பம்ம ஹொப்டன், அலிமா உம்மா வெல்லவெல லுணுகல, பொன்னழகள் டேனியல் அரிகரன் ஹாலிஎல, எம்.எ.ஏசு். சத்சரணி லுணுகல, அந்தோனி நோவா அடாவத்த லுணுகல, வெள்ளையன் சுப்ரமணியம் தேஷ்போக், பாக்கியநாதன் யோகநாதன் மீதும்பிட்டி,ஆர்.எம் அசோக பத்மகுமார யப்பம, பெருமாள் முரளிதரன் எல்ராடோ லுணுகலை, சொக்கன் 19 ஆம் கட்டைஹொப்டன்.

இதேவேளை உயிரிழந்த அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரசாங்கத்தால் தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது.

இதேவேளை,பசறை 13 ஆம் கட்டை பகுதியில் நேற்று (20) விபத்துக்குள்ளான பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து குறித்த சாரதி தப்பியோடியிருந்த நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிக்கின்றனர்.

இதேவேளை விபத்தில் 9 ஆண்களும் 5 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 சிறுவர்கள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களுள் 20 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.