Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Published

on

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரை சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி திரும்பிய போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *