உள்நாட்டு செய்தி
சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள்

மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இன்று (15) ஆரம்பமாகியுள்ளன.
இதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டமே இவ்வாறு ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன.
கொவிட் தொற்றுக் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வகுப்புக்களில் உள்ள சகல மாணவர்களை அழைப்பதா அல்லது பகுதியளவான மாணவர்களை அழைப்பதா என்பது பற்றி பாடசாலைகளில் நிலவும் இடவசதிகளைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.