Connect with us

உள்நாட்டு செய்தி

இளம் முயற்சியாளர்கள் இருபதாயிரம் பேருக்கு காணி அலகுகள்.

Published

on

நாட்டில் 20,000 இளம் முயற்சியாளர்களுக்காக இந்த வருடத்தில் காணி அலகுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இளம் முயற்சியாளர்களுக்காக ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் இதுவென காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க தெரிவித்தார்.

தெரிவுசெய்யப்பட்ட முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இந்நாட்களில் இடம்பெறுவதுடன் அவை எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயம் கால்நடை வளர்ப்பு, நுண் தொழில் முயற்சி மற்றும் தேசிய உற்பத்திகள் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு காணிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *