Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்

Published

on

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டார்.இதேவேளை யாழ் வர்த்தக சமூகத்துடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் யாழ். பொது நூலகத்திற்கு சென்ற அவர் திருவள்ளுவர் சிலை, அப்துல் கலாமின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நூலகத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *