பொழுதுபோக்கு
உயரமான உலக அதிசயம்: இன்று மார்ச் 31 ஈபிள் டவர் தினம்
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/04/z3rNHS9Y6PV6vbhH8w83Yn.jpg)
உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். இதன் உயரம் 1083 அடி. தரைப்பகுதியில் அகலம் 410 அடி. இதில் நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன.
5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 தொன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன.28ல் தொடங்கப்பட்டது.22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.