Connect with us

பொழுதுபோக்கு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Published

on

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இலங்கைக்கு வந்த ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மில்லியன் என்ற எண்ணிக்கையை குறிக்கும் வகையில், ரஷ்ய பிரஜை மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.அவர்களை வரவேற்கும் முகமாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

சுற்றுலாப் பயணிஇலங்கைக்கு வந்த மில்லியனாவது சுற்றுலாப் பயணி ரஷ்ய நாட்டவர் Alex Mazkov ஆவார். அவருடன் அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் இருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர் 2019 இல் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஊக்குவிப்பு அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ஜயசேகர தெரிவித்தார்.

அதிகார சபை இந்த மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஊக்குவிப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *