Connect with us

உள்நாட்டு செய்தி

கிணற்றில் வீழ்ந்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் : இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Published

on

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்ற வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *