உள்நாட்டு செய்தி
ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை !
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/03/download-32.jpeg)
குடும்பத் தகராறு முற்றியதை அடுத்து 40 வயது கணவன் தனது 33 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸார் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.